மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் மனுவில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கையொப்பமிட்டனர்.
மாநிலங்களவையில் காலியாக உள்ள உறுப்பினர்கள் இடங்களுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக உறுப்பினர்கள் இருவரின் பதவிக் காலம் ஜூலை 24 ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ள நிலையில், அந்த இரண்டு இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவை தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிட உள்ள நிலையில், வேட்பு மனுவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.