18 ஆண்டுகளுக்குப் பின் பெங்களூரு சாம்பியன்!
Jan 14, 2026, 12:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

18 ஆண்டுகளுக்குப் பின் பெங்களூரு சாம்பியன்!

Murugesan M by Murugesan M
Jun 4, 2025, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

18 வருடங்கள் காத்திருப்பிற்கு பிறகு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று மகுடம் சூடியது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி; இதுகுறித்த செய்தித் தொகுப்பு ஒன்றை தற்போது காணலாம்..!

கிரிக்கெட் ரசிகர்களிடம் இந்த வருடத்தின் லக்கி நம்பர் என்னவென்று கேட்டால் நிச்சயம் 18 ஐ தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? விராட் கோலியின் கண்ணீரில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம் இந்த 18 வருடங்களின் காத்திருப்பு எத்தகைய வலியை கொடுத்திருக்கும் என்று..!

விராட் கோலியின் ஜெர்சி நம்பர் 18, ஆர் சி பியின் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் 18, இதுவரை பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் நேருக்கு நேர் பெற்ற வெற்றிகள் 18 என 18 ஆம் நம்பரை மறந்துவிட முடியாது.

உலகிலேயே லாயல் fan பேஸ் கொண்ட மிகச்சிறந்த அணியாக வலம்வரும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தங்களது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

பஞ்சாப் உடனான இறுதிப் போட்டியில் 6 ரன்கள் விதியசத்தில் வெற்றி பெற்று, 18 வருடங்கள் காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது பெங்களூர் அணி. வெற்றிக்கு பிறகு பேசிய விராட் கோலியிடம் இந்த தருணத்தை எப்படி உணருகிறீர்கள் என கேட்ட போது “18 வருஷங்களாக இந்த அணிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். இந்த தருணத்தை விவரிக்க முடியாது” என்று கூறினார்.

வெற்றி பெறுவதற்கு முன்பாகவே மைதானத்தில் கண் கலங்கியபடி பீல்டிங்  செய்த விராட் கோலியை ஒவ்வொரு பந்திற்கு மத்தியிலும் ரசிகர்கள் உற்சாகப் படுத்தினர். அணி வெற்றி பெற்றவுடன் மைதானத்திலேயே அவர் மண்டியிட்டு அமர்ந்து உடைந்து அழத் தொடங்கினார்.

மனைவி அனுஷ்கா, முன்னாள் வீரர்கள் AB டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில், மென்டார் தினேஷ் கார்த்திக் என ஒவ்வொருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ரசிகர்களும் பட்டாசுகள் வெடித்தும் ஆர்ப்பரித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகைய உணர்வுபூர்வமான தருணங்களும், கொண்டாட்டங்களும் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். ஏனெனில் முதல் முறையாக 2009 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் களம் கண்ட ஆர்சிபி, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது, 2011 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.  2016 இல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இறுதிப் போட்டியில் 8 ரன்கள் விதியசத்தில் தோல்வி அடைந்தது.

2016ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தாண்டுதான் இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை பெற்றது பெங்களூரு அணி. இந்த வாய்ப்பை கணக்கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட RCB நல்ல பவுலிங் லைனப், குட் பேட்டிங் எபிலிட்டி என அனைத்திலும் அசத்தியது.

அணியை இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக வழிநடத்திய ரஜத் படிதார், பெங்களூர் ரசிகர்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் தன் வசம் இழுத்து விட்டார்.

கடந்த வருடம் womens premier league தொடரில் பெங்களூரு அணி கோப்பை வென்று அசத்தியது, நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர் சி பி கோப்பையை வென்று வரலாறு எழுதி இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் “ஈ சாலா கப் நமதே” என்ற நம்பிக்கையுடன் ஆர்.சி.பி. அணி களமிறங்கும். ரசிகர்களும் அதே நம்பிக்கையுடன்தான் இருப்பார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் இதுவரை பெங்களூரு அணியால் கோப்பையை தனதாக்க முடியாமல் போனது. ஆனால், 18 வருட காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஆர்சிபி, இந்த முறை ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கிவிட்டது. தொடக்கத்திலேயே கூறியதுபோல ஆர்சிபி வீரர்களும், ரசிகர்களும் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா முழுவதும் தற்போதைக்கு ஒலிப்பது ஒற்றை வார்த்தைதான். அது, “ஈ சாலா கப்பு நம்து”

Tags: IPL 2025.Bengaluru champions after 18 yearsபெங்களூரு சாம்பியன்
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவை உறுப்பினர் பதவி : அதிமுக வேட்பாளர்களின் மனுவில் கையொப்பமிட்ட எம்எல்ஏக்கள்!

Next Post

கோவை : மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

இலக்கைத் தவற விட்ட PSLV-C62 ராக்கெட் : தொழில்நுட்ப கோளாறு காரணமா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies