கோவையில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போலீசார் வேலுச்சாமி என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சாட்சி விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளியான வேலுச்சாமிக்கு ஒரு ஆயுள் தண்டனையும், கூடுதலாக 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.