சத்தியமங்கலம் அருகே நடைபெற்ற கறி விருந்து விழாவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள அரியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் திமுக மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர் அண்மையில் அப்பகுதியில் நடைபெற்ற கறி விருந்து விழாவில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திமுக நிர்வாகியான கந்தசாமியைக் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.