உக்ரைன் தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்யா மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது.
இதில் ஏராளமான கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்து, இடிந்து தரைமட்டமானது. நேற்று முன்தினம் ட்ரோன் மூலம் ரஷியாவிற்குள் ஊடுருவி வெவ்வேறு பகுதியில் உள்ள 4 ராணுவ விமான நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட போர் விமானங்களைத் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே கீவ்வை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.