கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகு சேவையின் கட்டணத்தை உயர்த்தி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை சீசன் முடிவடைந்துள்ள நிலையில் சுற்றுலா படகு சேவையின் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் 75 ரூபாயாக இருந்த கட்டணம், 100 ரூபாயாகவும், மாணவர்களுக்கு 30 ரூபாயாக இருந்த கட்டணம் 40 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.