இத்தாலியின் சிசிலி தீவின் கிழக்கு கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எட்னா எரிமலை திடீரென வெடித்தது.
எரிமலை வெடித்ததால் அருகிலுள்ள பகுதிகளில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர். எரிமலையிலிருந்து ஆபத்தான வாயுக்கள் வெளியேறுவதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்களை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர்.
மவுண்ட் எட்னா எரிமலை கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெடித்து வருவதாக இத்தாலியின் புவி இயற்பியல் மற்றும் எரிமலையில் தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.