கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் தேனீர் கடைக்குச் சென்ற 2 பேரை மதுபோதையில் இருந்த கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜூப்ளி தெருவைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் அஜீஸ் நகரில் உள்ள தேநீர்க் கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த இளைஞர்கள் சிலர் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தாக்கத் தொடங்கினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.