5 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க்கின் தந்தை யரோல் மஸ்க், இந்திய மக்கள் அன்பும், கருணையும் கொண்டவர்கள் எனத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்திக்குச் சென்றடைந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா ஒரு அற்புதமான நாடு எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் வணிகம் சார்ந்த பல திட்டங்களைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறிய யரோல் மஸ்க், இந்திய – அமெரிக்க உறவு நல்ல முறையில் அமையும் என நம்புவதாகத் தெரிவித்தார்.