பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப்பில் செவ்வாய் கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் சிந்தூர் பெயரை கொண்டு வாக்குகளை பெற பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
சிந்தூர் மூலம் வாக்குகளைப் பெற இது என்ன ஒரு நாடு-ஒரு கணவர் திட்டமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங், பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மனைவிகளை அவர் புண்படுத்தி உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.