ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பெங்களூருவில் நடைபெற்ற சம்பவம் மிகத் துயரமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் தனது எண்ணங்கள் இருப்பதாக கூறியுள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக பதிவிட்டுள்ளார்.