பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு கர்நாடக முதல்வர சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.