ஜப்பானில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வணிக வளாகங்களில் அரிசியை வாங்கிச் செல்வதற்காக மக்கள் அலைமோதி வருகின்றனர்.
கடந்த கோடையிலிருந்து மக்களுக்கு தேவைக்கேற்ப அரிசி கிடைக்காததால், அரிசியின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் அரசாங்கம் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்ட அரிசியை, சில்லறை விற்பனையாளர்களுக்கு நேரடியாக வழங்க தயாராக இருப்பதாக அந்நாட்டு விவசாயத்துறை அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி தெரிவித்துள்ளார்.