சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு, CITU வின் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர், முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயோமெட்ரிக் முறையில் விடுப்புகளைச் சுரண்டாதே, தொழில்நுட்ப ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள், அலுவலகப் பணியாளர்களை அடிமைப்படுத்தாதே உள்ளிட்ட முழக்கங்களுடன் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு, CITU வின் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பதாகவும், இதுகுறித்து புகார் கொடுத்தால் ரகசியம் பாதுகாக்கப் படாமல் விஷயம் வெளியேறுவதாகவும் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து முடிவு எட்டப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தனர்.