தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மோதல் முடிவுக்கு வராத நிலையில், இருவரும் தனித்தனியாக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பாமக நிறுவனர் ராமதாசுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவன் தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அன்புமணியின் மகள் சஞ்சுத்ரா கலந்து கொண்டார். ஒரு மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் அன்புமணியும், அவரது மகளும் காரில் புறப்பட்டுச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசுடன் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.