ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தை ஞாயிற்று கிழமை நடத்துமாறு கூறிய காவல்துறையின் அறிவுறுத்தலை, ஆர்சிபி அணி நிர்வாகம் நிராகரித்து நிகழ்ச்சியை நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலைச் சமாளிக்க முடியாது என்பதால் நிகழ்ச்சியை ஞாயிற்று கிழமை நடத்துமாறு ஆர்சிபி அணி நிர்வாகத்திற்கு அம்மாநில காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதனை ஏற்க மறுத்த அணி நிர்வாகம், வெளிநாட்டு வீரர்கள் நிறையபேர் இருப்பதால் நிகழ்ச்சியை உடனடியாக நடத்தியாக வேண்டும் என அடம் பிடித்து நிகழ்ச்சியை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்சிபி அணியின் இந்த முடிவே, அசம்பாவிதத்திற்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.