ஆந்திராவில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 4 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லூர் மாவட்டம், ஆத்மகூர் பகுதியைச் சேர்ந்த 8 பெண் தொழிலாளர்கள், தெல்ல பாடுவில் உள்ள புகையிலை தோட்டத்திற்கு வேலைக்காக ஆட்டோவில் சென்றுள்ளனர்.
ஏ.எஸ்.பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்றுகொண்டிருந்தபோது, எதிர் திசையில் வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 பெண் தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.