உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் யமுனை நதியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற 6 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
வயலில் வேலை செய்துவிட்டு நதிக்கரைக்குக் குளிக்கச் சென்ற அவர்கள், நதியில் இறங்கி விளையாடியபடி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர்.
அப்போது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், பல மணிநேர போராட்டத்திற்குப் பின் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
6 பேரும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.