மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் தவெக தலைவர் விஜய்க்குள் உள்ளதென நினைப்பதாக கூறினார்.
கமல் தாய்மொழியை உயர்த்தி பேசியது வரவேற்கதக்கது என்றும், ஆனால் மற்ற மொழியுடன் ஒப்பிட்டு பேசுவது பொருந்தாது என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் போதைப்பொருள், கஞ்சா, பாலியல் படுகொலை போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதானவர்கள் ஏற்கனவே 19 கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏழாம் தேதி இரவு மதுரை வருவதாக தெரிவித்தார். காலையில் மீனாட்சி கோயிலுக்கு செல்லும் அவர், பின்னர் கட்சியினர் கூட்டத்தில் கலந்துகொள்வதாக கூறினார். மூன்று மணியளவில் வேலம்மாள் திடலில் மாநில(தமிழ்நாடு),மண்டல,மாவட்ட தலைவர்கள்,பொறுப்பாளர்களை சந்தித்து பேசுவதாகவும் கூறினார்.