கும்பகோணம் பாணபுரிஸ்வரர் கோவிலில் ஆகமம் பயிலாமல் ஒருவர் அபிஷேகம் செய்தது குறித்து விசாரனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் பேட்டியளித்த அவர், ஒருகால பூஜை நடைபெறும் கோயில்களில் வைப்பு நிதியை அதிகப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் வட்டியை கொண்டு பூஜை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இதுவரை 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயிரம் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.