காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத சூழலை அறவே ஒழிக்கும் வகையில்,32 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை மேற்கொண்டது.காஷ்மீரின் அமைதியை குலைக்க பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் சதி செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக, தி ரெசிஸ்டன்ட் பிரன்ட், காஷ்மீர் டைகர்ஸ், பி.ஏ.ஏ.எப் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்களின் இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.