தேசத்துக்கு பணி செய்வது கட்சி விரோத செயலா என காங்கிரஸ் தலைமைக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆப்ரேஷன் சிந்துார் மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு அம்பலப்படுத்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையில், அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டது. சசி தரூரின் பெயரை காங்கிரஸ், பரிந்துரைக்காத நிலையில், அவரது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்தது.
மேலும், அதிருப்தி அடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள், பாஜகவின் சூப்பர் செய்தித் தொடர்பாளர் போல் சசி தரூர் செயல்படுவதாக விமர்சித்தனர். இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், நாட்டின் நலனுக்காக சேவை செய்யும்போது, வெளியில் இருந்து கூறப்படும் கருத்துகளை ஒருவர் கண்டுகொள்ளவே கூடாது என தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு தாங்கள் சுற்றுலாவுக்காக வரவில்லை என்றும், நாட்டின் ஒற்றுமைக்காக ஒன்றுக்கூடி வந்துள்ளதாகவும் சசி தரூர் கூறியுள்ளார்.