கிருஷ்ணகிரி மாவட்டம் அந்திவாடி பகுதியில் உள்ள ஶ்ரீ எல்லம்மா தேவி கோயிலுக்குள் அனைத்து சமுதாய மக்களையும் அனுமதிக்க உரிமை வழங்க வேண்டும் என பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பாஜக தெற்கு மண்டலச் செயலாளர் கோபி தலைமையில் சென்ற பாஜகவினர் மற்றும் கிராம மக்கள், ஓசூர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அப்போது, தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட அறங்காவலர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், கிராம மக்களிடம் ஆலோசனை நடத்தாமல் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.