ராஜஸ்தானில் உள்ள திருமண வீட்டில் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை, துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
500 ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாலையாகக் கோர்க்கப்பட்டு மணமகனுக்கு அணிவிக்கப்பட்டது.
பின்னர் அந்த மாலை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டபோது, காரில் வந்த மர்ம நபர்கள், ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையைத் துப்பாக்கி முனையில் பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.