ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டாரின் 41வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பஞ்சாப்பில் உள்ள பொற்கோயிலுக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
1984ஆம் ஆண்டு ஜுன் 6ஆம் தேதி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கிய பிரிவினைவாதிகளைப் பிடிக்க ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற நடவடிக்கை இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டாரின் 41வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமிர்தசரஸ் நகர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமிர்தசரஸ் நகரின் 4 மண்டல நுழைவாயில்களிலும் சோதனைச்சாவடி அமைத்துக் கண்காணிப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சட்டத்தைக் கையில் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.