நெல்லையில் முதல் நாள் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் குதிரையில் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
சங்கர் நகரைச் சேர்ந்த லட்சுமணன், முத்து கணேஷ் சகோதரர்கள் குதிரைகளை வளர்த்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் தாழையூத்து பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் LKG வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.
முதல் நாள் வகுப்பிற்குக் குழந்தைகள் இருவரும் குதிரைகளில் சென்றனர். இது அப்பகுதி மக்களை அச்சரியத்தில் ஆழ்த்தியது.