பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது சான்றிதழ்களை வரும் 9 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு கடந்த மே 7ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து கலந்தாய்வுக்காக சுமார் 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்ப பதிவு முடிவடையும் நிலையில், விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை வரும் 9 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஆர்க் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு ஜூன் இறுதி வரை நடைபெற உள்ளதால் அதற்கான விண்ணப்பப் பதிவினை ஜூன் 30 ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் துணை கலந்தாய்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.