சிங்கம்புணரி அருகே சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பைக் கண்டுபிடித்த அரசுப் பள்ளி மாணவிகளுக்குத் தமிழக அரசு பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தில் முகாமை நடத்தியது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து 46 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர் குழுக்கள் பங்கேற்றன. அந்தவகையில், இதில் பங்கேற்ற வலசைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பைக் கண்டுபிடித்து அசத்தினர். அவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.