அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸை சந்தித்த சசி தரூர் தலைமையிலான குழுவினர் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கமளித்தனர்.
எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள் குறித்தும் விளக்கமளிப்பதற்காக அமெரிக்கா சென்றடைந்தனர்.
அந்நாட்டுத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸை நேரில் சந்தித்த குழுவினர் இந்தியாவும், பாகிஸ்தானும் சமமானவை அல்ல என்பதால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சாத்தியமில்லை எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து பேசிய சசிதரூர் மத்தியஸ்தகம் என்பது இரு நாடுகளுக்கும் இடையேயான சமத்துவத்தைக் குறிக்கும் நிலையில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானிடம் அந்த சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் மத்தியஸ்த கோரிக்கை குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கத் துணை அதிபரும், அமெரிக்க அரசும் புரிந்துகொண்டதாகத் தெரிவித்தார்.