கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே, அரசு நகரப் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் பதற்றம் நிலவியது.
மந்தூராவிலிருந்து ஹுப்பள்ளி நோக்கி அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பன்னூர் அருகே சென்றபோது பேருந்தில் திடீரென தீப்பற்றியது.
இதை அறிந்த ஓட்டுநர், பேருந்தை உடனடியாக நிறுத்திவிட்டு பயணிகளைக் கீழே இறக்கி விட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.