அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!
Jan 14, 2026, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

Murugesan M by Murugesan M
Jun 7, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் எந்த அடிப்படை வசதியும் இன்றி 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்பாக்கம் ஊராட்சியில் வெள்ளம் பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் அரசு செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை கடுமையாகச் சரிந்துள்ளது.

கிராமத்திற்குச் செல்ல பேருந்து வசதி இல்லாததால் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்குப் பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளனர்.

இதனால் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி கட்டடம் பழுதடைந்து விட்டதால் அருகிலிருக்கும் நூலக கட்டடமே பள்ளியின் வகுப்பறையாகச் செயல்பட்டு வருகிறது. எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படாததால் கிராமத்தில் உள்ள மாணவர்கள் அருகில் உள்ள தனியார்ப் பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளியில் ஒரு மாணவி மட்டுமே படித்து வந்த நிலையில் தற்போது இரண்டு பேர் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதனால் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது.

புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டும் திறக்கப்படாததால், நூலகத்திலேயே மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர் பள்ளியில் தங்களின் குழந்தைகளைச் சேர்க்கத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மேலும் பள்ளி வளாகம் புதர் மண்டி காட்சியளிப்பதாலும், பள்ளிக்குச் செல்லும் வழியில் மின்கம்பங்கள் தாழ்வாக உள்ளதாலும் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த புதிதாகக் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை உடனடியாக திறக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரவும், போதிய ஆசிரியர்களை நியமிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தி, உரியத் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Government school without basic facilities: Only 3 students are studyingஅடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளிகல்வி கற்கும் நிலை
ShareTweetSendShare
Previous Post

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Next Post

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies