அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!
Sep 13, 2026, 04:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

Murugesan M by Murugesan M
Jun 7, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் எந்த அடிப்படை வசதியும் இன்றி 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்பாக்கம் ஊராட்சியில் வெள்ளம் பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் அரசு செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை கடுமையாகச் சரிந்துள்ளது.

கிராமத்திற்குச் செல்ல பேருந்து வசதி இல்லாததால் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்குப் பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளனர்.

இதனால் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி கட்டடம் பழுதடைந்து விட்டதால் அருகிலிருக்கும் நூலக கட்டடமே பள்ளியின் வகுப்பறையாகச் செயல்பட்டு வருகிறது. எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படாததால் கிராமத்தில் உள்ள மாணவர்கள் அருகில் உள்ள தனியார்ப் பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளியில் ஒரு மாணவி மட்டுமே படித்து வந்த நிலையில் தற்போது இரண்டு பேர் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதனால் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது.

புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டும் திறக்கப்படாததால், நூலகத்திலேயே மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர் பள்ளியில் தங்களின் குழந்தைகளைச் சேர்க்கத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மேலும் பள்ளி வளாகம் புதர் மண்டி காட்சியளிப்பதாலும், பள்ளிக்குச் செல்லும் வழியில் மின்கம்பங்கள் தாழ்வாக உள்ளதாலும் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த புதிதாகக் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை உடனடியாக திறக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரவும், போதிய ஆசிரியர்களை நியமிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தி, உரியத் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Government school without basic facilities: Only 3 students are studyingஅடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளிகல்வி கற்கும் நிலை
Share
Tweet
SendShare
Previous Post

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Next Post

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies