பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலன்காவை வீழ்த்தி அமெரிக்காவின் கோகோ கப் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவருமான அரினா சபலன்காவும், அமெரிக்காவை சேர்ந்த கோகோ கப்பும் பலப்பரீட்சை நடத்தினர்.
2 மணிநேரம் 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கோகோ கப் முதல்முறையாக கைப்பற்றினார். கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில், இதே சபலன்காவை தோற்கடித்து கோகோ கப் மகுடம் சூடியிருந்தார். இதன்மூலம், 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கோகோ கப் வென்று அசத்தியுள்ளார்.