வார விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று அதிகாலையிலேயே, கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் குவிய தொடங்கினர். தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கோயிலுக்கு சென்ற பக்தர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.