தமிழ்நாட்டில் காலியான 6 மாநிலங்களவை பதவி இடங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது.
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 பேர் உட்பட 13 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
குறிப்பாக திமுக கூட்டணியில் கமல் உட்பட 4 பேரும், அதிமுகவில் 2 பேரும் என மொத்தம் 6 பேர் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வாகவுள்ளனர்.
இந்நிலையில், வேட்புமனுவைத் திரும்பப்பெற வரும் 12-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.