பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் முட்டை மற்றும் சிக்கன் கிரேவி சாப்பிட்டவர்களால் சர்ச்சை ஏற்பட்டது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜகோபுரம் உட்புறத்தில் ஐந்தாம் பிரகாரத்தில் தம்பதி இருவர் முட்டை பிரியாணி மற்றும் சிக்கன் கிரேவி என அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்தவர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற போலீசார் அசைவ உணவு சாப்பிட்டது குறித்து விசாரணை நடத்தியதுடன் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இந்து சமய அறநிலையத்துறையினர் பக்தர்களை முறையாகப் பரிசோதனை செய்து அனுப்பியிருந்தால் அசைவ உணவைக் கோயிலுக்குள் எடுத்துச் சென்றதைத் தடுத்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.