ஐசிசியின் ‘ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம் பிடித்துள்ளார்.
ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ‘ஹால் ஆஃப் பேம்’ விருதை ஐசிசி வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான பட்டியலில் புதிதாக 7 பேரை ஐசிசி தேர்வு செய்து கவுரவித்துள்ளது.
இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐசிசி உலகக்கோப்பையை இந்தியாவுக்காக வென்று தந்த கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இடம் பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் இடம் பிடித்த 11வது இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, தென்னாப்பிரிக்காவின் ஹசிம் அம்லா, கிரீம் ஸ்மித், பாகிஸ்தான் மகளிர் அணியின் சனா மிர், இங்கிலாந்து மகளிர் அணியின் சாரா டெய்லர் ஆகியோரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.