நெல்லை வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகப் பெருமானுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து உற்சவருக்குப் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.