ஈரானில் உள்ள 20 நகரங்களில் நாய்களைத் தெருக்களில் வாக்கிங் அழைத்துச் செல்வதற்கான தடையை அந்நாட்டு அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஈரானின் தலைநகர் தெஹ்ரனில் உள்ள தெருக்களில் நாய்களை நடைப்பயிற்சி அழைத்துச் செல்ல முதன்முதலில் தடை விதிக்கப்பட்டது.
நாய்களை நடைப்பயிற்சி அழைத்துச் செல்வதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.