இந்தியாவுடனான பரஸ்பர உறவை விரும்புவதாக வங்கதேச அரசின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
பக்ரீத் பண்டிகையையொட்டி வங்கதேச மக்களுக்கும், முகமது யூனுசுக்கும், பிரதமர் மோடி வாழ்த்துக்களைக் கூறியிருந்தார்.
இதற்கு எழுதப்பட்ட பதில் கடிதத்தில், பரஸ்பர உறவு, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை 2 நாடுகளையும் ஒன்றிணைத்து மக்களின் நலனுக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக முகமது யூனுஸ் கூறியுள்ளார்.