பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் தேர்த்திருவிழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூகத்தினரைக் கண்டித்து மற்றொரு சமூகத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேதமாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இதன் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நடைபெற உள்ள நிலையில் தங்கள் தெருவின் வழியாகத் தேரோட்டம் நடத்தப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமூகத்தினர் ஆண்டு தோறும் நடத்தப்படுவது போல தங்களின் தெரு வழியாகத் தான் தேரோட்டம் நடத்தப்படும் எனக் கூறினர்.
இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் போலீசாரின் பாதுகாப்புடன் தேரோட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனைக் கண்டித்த ஒரு தரப்பினர் கடையடைப்பு போராட்டம் நடத்தித் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.