டெல்லியின் துவாரகா அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
துவாரகா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 7-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்துத் தகவலறிந்து 8 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், குடியிருப்பில் சிக்கியிருந்த நபர்களை ஸ்கை லிஃப்ட்களை பயன்படுத்தி மீட்டனர்.
மேலும், தீ விபத்திலிருந்து தப்பிப்பதற்காக மாடியிலிருந்து கீழே குதித்த 2 சிறுவர்கள் மற்றும் தந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.