வனப்பகுதியில் உணவுத்தட்டுப்பாடு : ஊருக்குள் புகும் கரடிகள் - சேதமாகும் பயிர்களால் விவசாயிகள் வேதனை!
Jun 12, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வனப்பகுதியில் உணவுத்தட்டுப்பாடு : ஊருக்குள் புகும் கரடிகள் – சேதமாகும் பயிர்களால் விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியில் நிலவும் உணவுத் தட்டுப்பாட்டால் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து சேதப்படுத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. மனித விலங்கு மோதலுக்கான அடிப்படை காரணமாக அமைந்திருக்கும் உணவுத் தட்டுப்பாடு குறித்தும், அதற்கான காரணங்கள் பற்றியும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகத் திகழும் நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதி யானை, கரடி, சிறுத்தை, புலி, மான் என ஏராளமான வனவிலங்குகளின் வாழ்விடமாக விளங்கிவருகிறது.

அத்தகைய வனப்பகுதிகளில் வசிக்கும் விலங்குகள் போதிய உணவின்மை காரணமாக ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளையும், விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் சேதப்படுத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர், குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி வரும் கரடிகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

உணவு தேடி ஊருக்குள் புகும் கரடிகள், ஹோம் மேட் சாக்லெட் தொழிற்சாலை, பேக்கரி, தேயிலைத் தோட்டங்கள் மட்டுமல்லாது கோயிலில் உள்ள பிரசாதங்களையும் உண்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாகக் கரடிகள் ஊருக்குள் வருவது தொடர்பாக ஆவணக் காப்பகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் உணவுத் தட்டுப்பாடே கரடிகள் ஊருக்குள் நுழைய முக்கிய காரணம் எனக் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் பழ மரங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதும், தேன்களை விற்பனைக்காக மக்கள் எடுத்துச் செல்வதும் கரடிகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட மற்றொரு காரணமாகவும் அமைந்திருக்கிறது. மனித விலங்கு மோதலுக்கு வழிவகுக்கும் இத்தகைய செயல்பாடுகளைத் தவிர்க்க ஆவண காப்பகத்தினர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்

வீடுகளில் சேகரிக்கப்படும் உணவுக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் வனப்பகுதியின் எல்லையோரத்தில் கொட்டப்படுவதும் கரடிகள் ஊருக்குள் வருவதற்குக் காரணமாகவும் கூறப்படுகிறது. மனித விலங்கு மோதல்கள் அதிகரிக்கும் முன்பாகவே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வனவிலங்குகளின் உணவுத் தேவையை வனத்துறை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: விவசாயிகள் வேதனைFood shortage in the forest: Bears entering the village - Farmers suffering due to damaged cropsஊருக்குள் புகும் கரடிகள்
ShareTweetSendShare
Previous Post

சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து : இந்தியாவின் பிரம்மாஸ்திரம் – பாலைவனமாகும் பாகிஸ்தான்!

Next Post

கலவர பூமியான கேளிக்கை நகரம் : அதிபர் ட்ரம்ப் உடன் மோதும் கலிஃபோர்னியா ஆளுநர்!

Related News

சேலத்தில் முதல்வரின் வருகையை முன்னிட்டு பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகள் – பொதுமக்கள் அவதி!

கோத்தகிரி அருகே கடன் நிலுவை தொகை செலுத்த தாமதம் – வாடிக்கையாளரை தாக்கிய தனியார் நிதி நிறுவன மேலாளர்!

முதலமைச்சரின் வருகைக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பயனாளிகள்!

முசிறி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேர் கைது – தமிழக காவல்துறை நடவடிக்கை!

கோவில்பட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பெட்ரோல் டேங்கர் லாரி!

Load More

அண்மைச் செய்திகள்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து – 242 பேரின் கதி என்ன?

பொறுமையை கடைபிடித்து இருந்தால் அன்புமணிக்கு முடிசூட்டி இருப்பேன் – டாக்டர் ராமதாஸ்

தக் லைப் படத்தை விரைவில் ஓடிடி தளத்திற்கு கொண்டு வர நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு!

அயர்லாந்தில் புலம்பெயர்ந்தோர் வீடுகளுக்கு தீ வைப்பு – வன்முறை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 7000 கன அடியாக உயர்வு!

பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.4.77 கோடி உண்டியல் காணிக்கை!

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு – டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!

குமரபாளையம் அருகே வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல்!

ட்ரோன் தயாரிப்பில் வல்லரசாக உருவெடுக்க இலக்கு – ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் தகவல்!

பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies