பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கான குறைத்தீர்ப்பு முகாமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கவுள்ளதாக பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், திருச்சியில் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ள இந்த குறைதீர்ப்பு முகாம் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் எனவும், 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் குறைகளை கேட்டறிந்து ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் தொடர்பான பிரச்னைகளை தீர்த்து காசோலைகளை வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.