பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் உட்பட 10 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும், கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சி பணிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.