கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பழுதானதால் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.
அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயோமெட்ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் பொருட்களைக் கொடுக்க அரை மணி நேரத்திற்கும் மேலானதால் மக்கள் அவதியடைந்தனர்.
இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கருவிழி ரேகை மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் பெரும்பாலான முதியோருக்குக் கருவிழி ரேகை ஸ்கேன் வேலை செய்வதில்லை. இதனால் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.