கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல் பூர்வமான முடிவுகள் வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்,
கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல் பூர்வமான முடிவுகள் வேண்டும் என்றும் பிரதமர் மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு ஏழை எளிய மக்கள் பயன்பட்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.
மோடி தலைமையிலான 11 ஆண்டுக்கால ஆட்சியில் ஊழல்கள் அதிகளவு ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் ஊழலற்ற, வெளிப்படைத்தன்மையான அரசை மோடி ஆட்சி வழங்கி வருகிறது என்றுமத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் குறிப்பிட்டார்.