ஆக்கிரமிப்பு அகற்றம் : பாம்பு, தேள்களுடன் வாழ்க்கை - அகதிகளான மக்கள்!
Jun 12, 2025, 10:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆக்கிரமிப்பு அகற்றம் : பாம்பு, தேள்களுடன் வாழ்க்கை – அகதிகளான மக்கள்!

Web Desk by Web Desk
Jun 12, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆக்கிரமிப்பு எனக்கூறி அடையாறு ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களை எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத பெரும்பாக்கத்திற்கு வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்திருப்பதாகத் தமிழக அரசு மீது புகார் எழுந்திருக்கிறது. ரேசன் கார்டு, சமையல் எரிவாயு இணைப்பு என எந்தவசதியுமின்றி அகதிகளாக வாழ்ந்து வரும் பொதுமக்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தங்களின் சுப காரியங்கள், முக்கிய நிகழ்வுகள், எதிர்கால திட்டங்கள் என ஒவ்வொன்றிருக்கும் திட்டமிட்டுக் கொண்டிருந்த மக்கள் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலையைக் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனகாபுத்தூரை அடுத்த சாந்தி காலனி, தாய் மூகாம்பிகை நகர், ஸ்டாலின் நகர் மற்றும் காயிதே மில்லத் நகர் என பல்வேறு பகுதிகளில் அடையாறு ஆற்றங்கரையோரம் இருந்த பல நூறு குடியிருப்புகள் முறையான முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்டன.

வீட்டு வரி, மின்சாரக் கட்டணம் என அனைத்து விதமான வரிகளையும், கட்டணங்களையும் செலுத்தி வந்த மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. மாற்று ஏற்பாடுகள் எனும் பெயரில் நீண்ட தூரத்திற்கு அப்பால் உள்ள தைலாவரம், பெரும்பாக்கம், கீரப்பாக்கம் பகுதிகளில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. அப்படி ஒதுக்கப்பட்ட வீடுகளோ, பேருந்து வசதி, பள்ளி, கல்லூரி வசதி என எந்தவித வசதிகளும் இல்லாத தனித்தீவாகக் காட்சியளிக்கிறது

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தங்களுக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கி குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வந்த பகுதியை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்போது அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

ரேசன் கார்டு, சமையல் எரிவாயு இணைப்பு, மருத்துவமனை வசதி என எந்தவித வசதிகளும் இல்லாத இடத்தில் ஒதுக்கப்பட்ட வீடுகளில் குடியிருப்பது, ஒவ்வொரு நாளும் நரகத்தில் வாழ்வதைப் போல் இருப்பதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாற்று ஏற்பாடுகள் எனும் பெயரில் ஒதுக்கப்பட்ட பத்து மாடி குடியிருப்பின் பல பகுதிகள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன.  வீடுகளை இடித்ததற்கான காரணத்தைக் கேட்டால் தங்களைக் கைது செய்வதையும், குரல்வளையை நசுக்குவதையுமே காவல்துறை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு எனக்கூறி சாதாரண மழை பெய்தாலே தாங்காத பெரும்பாக்கத்திற்கு  மாற்றியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டியது தான் என்றாலும் காலம் காலமாக அங்கிருக்கும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளோடு மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.

Tags: பாம்புLiving with snakes and scorpions: Removal as occupation - People who become refugeesஅகதிகளான மக்கள்ஆக்கிரமிப்பு என அகற்றம்தேள்
ShareTweetSendShare
Previous Post

தேனிலவு கொலையில் துப்பு துலங்கியது எப்படி? : சிக்கிய சிசிடிவி ஆதாரங்கள்!

Next Post

ஆபரேஷன் சிந்துார் – சேதமடைந்த விமானப்படை தளங்களை தார்ப்பாய் போட்டு மூடிய பாகிஸ்தான்!

Related News

I-STAR- வானில் நெற்றிக்கண் : அதிநவீன உளவு விமானத்தை வாங்க இந்தியா முடிவு!

நெல்லை – நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கோலாகலம்!

NO MISSILE… ONLY WATER BOMB : ஆபரேஷன் சிந்தூர்-2 ஆரம்பம் – மண்டியிடும் பாகிஸ்தான்!

கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

அதிகார வெறியில் யூனுஸ் : தேர்தலை ஒத்தி வைக்க சதி – வெடிக்கும் போராட்டம்!

உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் பேட்டரி கார் சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்!

சமயபுரம் கோயில் அருகே உறங்கிக்கொண்டு இருந்தவர் கார் மோதியதில் பலி!

அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

பொன்முடி மனு மீது வரும் 21ம் தேதி உத்தரவு – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!

விமான விபத்து மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்துக – குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

அகமதாபாத் விமான விபத்து – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விமான விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் – ஏர் இந்தியா சேர்மன் என்.சந்திரசேகரன்

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு!

விமான விபத்து குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் – குஜராத் முதல்வர்

சேலத்தில் முதல்வரின் வருகையை முன்னிட்டு பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகள் – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies