விருத்தாச்சலத்தில் தேவாலய திருவிழாவில் பங்கேற்கப் பாதயாத்திரை சென்ற 3 பேர் கார் மோதி உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வரதராஜன் பேட்டையைச் சேர்ந்தவர்கள், சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் தேவாலயத்திற்குப் பாதயாத்திரையாகச் சென்றுகொண்டிருந்தனர்.
விருத்தாச்சலம் – சேலம் புறவழிச் சாலையில் சென்றபோது, அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.