கோவை கொடிசியா அரங்கில் கேலக்ஸி மீடியா அமைப்பு சார்பில் ஆயிரத்து எட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பேரூர் ஆதீனம் உட்பட 5 ஆதீனங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக இதில் கலந்துகொண்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு திருவிளக்கு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பின்னர், கோவையில் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்த 51 பெண்களுக்கு மகா சக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.